Thursday, October 24, 2013

மலையே இறைவனாக காட்சிதரும் திருவண்ணாமலை என்று பலர் கூறிவந்தனர். ஆனால் தற்போது, இறைவனே கல்லாக மாறிவிட்ட இடமாக திருவண்ணாமலை இருப்பதாக சிலர் பேசுவதை கேட்க முடிகிறது. காரணம் இங்கு நடைபெற்றுள்ள கொடுமை. நல்ல வேளை இந்த உலகில் மனிதனை தவிர வேறு எந்த ஜீவனுக்கும் சிந்திக்கும் திறன் கிடையாது. ஒரு வேளை அப்படி சிந்திக்கும் திறன் இருந்தால் நாய் கூட இந்த மனித சமூகத்தை பார்த்து காரிதுப்பும்.






·         கந்துவட்டி கொடுமை காரணமாக திருவண்ணாமலையில் தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை முத்து நகர் பகுதியை சர்ந்தவர் சேகர்.  தையல் தொழிலாளியான சேகர், அங்கிருந்த சிலரிடம் சுமர் 50 ஆயிரம் பணத்தை கந்து வட்டிக்கு கடனாக பெற்றுள்ளார். வாங்கிய கடனை அடைக்க ரூபாய் 2 லட்சம் வரை  திரும்ப செலுத்தியும், மீண்டும் மீண்டும் வட்டியை செலுத்துமாறு கடன் அளித்த கும்பல் மிரட்டியுள்ளது. 


    


   இதனால் மனம் உடைந்த சேகர், செவ்வாய் இரவு புதுக்கோட்டையில் இருந்து தனது மனைவி ஹேமமாலினி மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகன் பரமேஸ்வரன் ஆகியோருடன் கிளம்பி திருவண்ணாமலைக்கு நள்ளிரவு அதிகாலை 3  மணிக்கு வந்து வேலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அறையில் தங்கியுள்ளனர். இன்று காலை 10 மணி வரை அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியபோது கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து ஓட்டல் நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது சேகர், மற்றும் அவரது மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மயக்க நிலையில் இருந்த பரமேஷ் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் 



   
   இறப்பதற்கு முன் சேகர், தான் கடன் வாங்கிய மற்றும் செலுத்திய விவரங்கள் மற்றும் தன்னை மிரட்டிய கும்பல் குறித்த விவரங்களை செல்போனுடன் எழுதி வைத்த கடிதம் அந்த அறையில் இருந்து கண்டெடுத்த போலீசார், அதன் விவரங்களை திருச்சி காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதேபோல், திருவண்ணாமலையில் கடன் தொல்லையால், தச்சு தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். புதுச்சேரி, திருநல்லூர், உத்தரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி வேலுசாமி, 40. இவரது மனைவி உத்திரா, 36. வேலுசாமி தனது தொழிலை விரிவுபடுத்த கடந்த சில மாதங்களுக்கு முன், 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு வந்தனர். ஆனால், வேலுசாமி கடனை திருப்பி தர முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் தனது மனைவி, குழந்தைகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம் கிராமத்தில் வசிக்கும் தனது மனைவியின் அக்கா சத்யா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு சத்யாவிடம் கடனை திருப்பி செலுத்துவதற்காக பணம் கேட்டுள்ளார். சத்யா தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். கடன் தொல்லையால் மனமுடைந்த வேலுசாமி திங்கள் அன்று  நல்லவன்பாளையம், வைர நகரில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.இதையறிந்த வேலுசாமியின் மனைவி உத்திரா மற்றும் சத்யா, ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு வந்து வேலுசாமியை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியில் உயிரிழந்தள்ளார். ஏழை, எளிய மக்களும், விவசாயிகளும் குடும்பம், குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் கொடுமையை தடுக்க தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Friday, October 4, 2013

 
மக்களை அச்சுறுத்தும் கல்குவாரி

உரிமத்தை ரத்து செய்யக் கோரி

கிராம மக்கள் பேராட்டம்

திருவண்ணாமலை அக் 4


             



திருவண்ணாமலை மாவட்டம் ஐங்குணம் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தும் விதமாக கல் குவாரி ஒன்று செய்பட்டு வருகிறது. அந்த கல்குவாரியில் குத்தகை சட்ட விதிகளை மீறி முறைகேடுகளும் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து வாலிபர் சங்கம் சார்பில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ஐங்குணம் கிராமத்தில் உள்ள மலையை 2009 ம் ஆண்டு முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளுக்கு தனியர் ஒருவருக்கு குத்தகை வழங்கப்பட்டுள்ளது. அந்த மலையை சுற்றி சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் மக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த மலையின் அருகிலேயே மக்கள் வழிபடும் தேவாலயமும், 50 க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. மலையில் உள்ள பாறையை வெடி வைத்து தகர்க்கும் போது, விளை நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் மலையில் உள்ள பாறைகளை உடைக்க சுமார் 100 அடி ஆழத்தில் ராட்சத போர்களை போட்டு அதில் டீசலை ஊற்றி வெடி வைக்கப்படுகிறது. இதனால் அருகில் உள்ள கிணறுகளில் தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குத்தகை உரிம்ம் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மிகப்பெரிய வெடிகள் வைத்து பாறைகளை உடைக்கின்றனர்.  எனவே, மாவட்ட நிர்வாகம் குவாரி உரிமையை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெள்ளியன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் அர்பாட்டம் நடத்தப்பட்டது. வட்டார தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். 

மாநில தலைவர் எஸ்.முத்துகண்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன், மாவட்ட தலைவர்கள் ஏ.லட்சுமணன், எம்.சிவக்குமார், எம்.பிரகலநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 18 ந்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் தனி நபர்களுக்கு மலை, பாறை ஆகியவற்றை வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.   
அரசு குத்தகைக்கு விட்ட நிலத்தை ஏலத்திற்கு எடுத்துக் கொண்டு தனி நபர்கள் கற்களை தங்கள் எல்லைகளைத் தாண்டியும் குத்தகைக் காலத்தைத் கடந்தும் சட்ட விரோதமாக வெட்டி எடுத்து விற்பது நடைபெற்று வருகிறது.  அரசு குவாரிகளுக்குப் பக்கத்தில் குத்தகைதாரர்கள் பெயரில் பட்டா நிலம் இருந்தால்,  அரசு குவாரிகளை முழுவதுமாகச் சுரண்டி அரசு நிலத்தில் எடுத்த கற்களை எல்லாம் பட்டா நிலத்தில் எடுத்ததாகக் காட்டி அரசிற்கு செலுத்த வேண்டிய பணத்தை முடக்குவது,  50 கன மீட்டர் கற்களை வெறும் 5 கன மீட்டர் என்று பொய்க் கணக்கு காட்டுவது, என பல வழிகளில் பணம் பார்த்து, மலைகள், ஏரிகள், ஓடைகளை சட்டத்திற்குப் புறம்பாக வெடி வைத்து பல நூறடிகள் தோண்டி ஆழமான பள்ளத்தாக்குகளாக, பாழ்நிலங்களாக மாற்றப்பட்டு கிடக்கிறது.  குவாரிக்குப் பக்கத்தில் நிலமோ, குடியிருப்புப் பகுதியோ இருக்கும் பட்சத்தில் குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பெரிய பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டு, கிராம மக்களுக்கு இடையூராக அமைவதும் நடைபெற்று வருகிறது. 

இதை கண்டறிய வேண்டிய உள்ளாட்சி பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் கண்டும் காணாமல் உள்ளனர். குத்தகை சட்ட விதிகளின் படி குடியிருப்புப் பகுதியைச் சுற்றி 300 மீட்டர் தொலைவிற்குள் எந்த குவாரியும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால்,   பாறைகளில் வெடி வைப்பதினால், ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் கீறல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலை ஏற்படும். மேலும், பாறைகளை வெட்டி எடுக்கும் போது ஏற்படும் மண் துகள்கள் தூசிகள் வீடுகளிலும் விளை நிலங்களிலும்  படிந்து பாழ்படுத்தும், அது மட்டுமின்றி பல்வேறு வியாதிகளை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உண்டாக்கும்.  குவாரிக் கழிவுகள் பாசனக் கிணறுகளிலும், ஓடைகளிலும், படிந்து  நீர்பாசானப் பாதை அடைபடும் ஆபத்துகளும் ஏற்படும் என்பதே உண்மை. எனவே, மக்கள் வாழ்விந்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் குவாரிகளை ஆய்வு செய்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.